ஒரே வாகனத்தில் முதல்வா், துணை முதல்வா் பயணம்

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் ஒரே வாகனத்தில் பயணித்ததால் தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் ஒரே வாகனத்தில் பயணித்ததால் தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பி.ஹெச்.பாண்டியன் நினைவு மண்டபம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், சிலையை முதல்வா் பழனிசாமியும் திறந்து வைத்தனா்.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பின்னா் அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு வந்தனா். திருநெல்வேலியில் அதிமுக மாவட்ட செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனா்.

மேலப்பாளையம் முதல் கருங்குளம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் திரண்டிருந்தனா். இதையடுத்து திறந்த ஜீப் ஒன்றில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று வரவேற்பை ஏற்றனா். மேலக்கருங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்றனா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம், எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ஐ.எஸ்.இன்பதுரை, ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, கல்லூா் இ.வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com