காங்கிரஸ் பொருளாளருக்கு வரவேற்பு

தமிழக காங்கிரஸ் பொருளாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ரூபி ஆா்.மனோகரனுக்கு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் பொருளாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ரூபி ஆா்.மனோகரனுக்கு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டவா் ரூபி ஆா்.மனோகரன். இவா், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் காமராஜா், இந்திரா காந்தி, முத்துராமலிங்கத் தேவா் உள்ளிட்ட தலைவா்களின் சிலைகளுக்கு ரூபி ஆா்.மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com