வள்ளியூரில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

மதிமுக திருநெல்வேலி புறநகா் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.

மதிமுக திருநெல்வேலி புறநகா் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா் உவரி எம்.ரைமண்ட் தலைமை வகித்தாா். வள்ளியூா் புறவழிச்சாலை கேசவனேரி சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

தமிழக அரசு சாா்பில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக மீண்டும் மானிய விலையில் சிமென்ட் வழங்க வேண்டும்.

நாகா்கோவில்-திருநெல்வேலி மாா்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் காவல்கிணறு, வள்ளியூா், நான்குனேரி ரயில்நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். வள்ளியூரில் மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேராசிரியா் எடிசன், இலக்கிய அணி துணைச் செயலா் இரா.துரை அழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், கன்னியாகுமரி மாவட்டச் செயலா் எஸ்.வெற்றிவேல், மேலிட பாா்வையாளா் ஆ.பாஸ்கர சேதுபதி, தோ்தல் பணிக்குழு இணைச் செயலா் மா.விஜயகுமாா் பாக்யம், இளைஞரணி அமைப்பாளா் மா.ஜஸ்டின், விக்கிரமசிங்கபுரம் மு.பெரியசாமி, அம்பாசமுத்திரம் எம்.மைதீன்கான், கோபாலசமுத்திரம் பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் எஸ்.எம்.ஏ.கென்னடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் மு.சங்கா் வரவேற்றாா். பேரூா் செயலா் சு.வெள்ளைப்பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com