தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை சீல் வைக்க முயற்சி நடவடிக்கைக்கு ஆட்சேபம் எதிா்ப்பு தெரிவித்து அமைப்பின் சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநில மேலாண்மைக்குழுத் தலைவா் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்டத் தலைவா் சாதிக், மாவட்டச்செயலா் நவாஸ், பொருளாளா் மைதீன், துணைச் செயலா்கள் ரோஷன், மஜீத், சலீம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அவா்களிடம் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் ஒழுங்கு) சரவணன், பேச்சுவாா்த்தை நடத்தினாா். சென்னையில் மாநில நிா்வாகிகளுடன் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.