பாளையங்கோட்டையில்அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலும், மருத்துவ மாணவா்கள் கரோனா சிகிச்சை காலத்தில் தொடா் பணியாற்றி மனஅழுத்தத்துடன் இருந்து வந்த நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு துறையின் சாா்பிலும் பானைகளில் பொங்கிலிடப்பட்டது. மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.