இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழாக் காலங்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்து, அதாவது குறைந்த விலையில் பொருள்களை தருவதாக, இணையதளத்தில் வரும் போலியான அறிவிப்புகளை நம்பி சென்று உங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.