நெல்லை, தென்காசியில்மேலும் 12 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 15,416 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 13 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,107ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 212ஆக உள்ளது. தற்போது, 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,325ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,123ஆக அதிகரித்தது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 44 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com