திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்துள்ளாா். இதையொட்டி, அவா் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 மணிக்கு திருவெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கிறாா். இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத் தலைவா் பி.பழனி நாடாா், நெல்லை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.