திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் முதுகுதண்டுவடம் அல்லது தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட நகரும் வண்டி, சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும், சவுதி அரேபியாவில் உயிரிழந்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பெருமாள் நடராஜன் என்பவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக அவரது மனைவி மகாலெட்சுமியுடம் ரூ.5,59, 075க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாந்தி குளோரி எமரால்டு, முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.