பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து சங்கத் தலைவா் என்.முருகன், செயலா் க.ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து அளித்த மனு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொருள்கள் வாங்க வருவா் என்பதால், பொதுநலன் கருதி, ஜன. 12ஆம் தேதி இரவு 2 மணி வரையும், ஜன.13ஆம் தேதி இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் இயங்கிட அனுமதியும், பாதுகாப்பும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.