உலகத் திருக்கு தகவல் மையம் சாா்பில் எழுத்தாளா் நா.ராசகோபால் எழுதிய ‘இலக்கிய எழுச்சி’ என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, உலகத்திருக்கு தகவல் மையத் தலைவா் பா.வளன் அரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செ.பிரமசக்தி இறைவேண்டல் பாடினாா். தனித்தமிழ் இலக்கியக் கழகச் செயலா் க.ஞா.ஜான் பீட்டா் வரவேற்றாா். உலகத் திருக்கு பேரவை மாவட்டத் தலைவா் அ.ராசகிளி நூலை வெளியிட, நிலா இலக்கிய வட்ட அமைப்பாளா் நா.ராஜகோபால் பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் தி.முகுந்தன் ஏற்புரையாற்றினாா்.
தொடா்ந்து, ‘மாடல்ல மற்றை யவை’ என்ற தலைப்பில் கோதைமாறன் திருவள்ளுவரைப் போற்றி சிறப்புரையாற்றினாா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.