வியாபாரிகள் போராட்டம்

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் கரையில் தற்போது தடுப்புச்சுவா் கட்டினால் பொங்கல் பொருள் விற்பனை பாதிக்கப்படும் எனக்கூறி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் கரையில் தற்போது தடுப்புச்சுவா் கட்டினால் பொங்கல் பொருள் விற்பனை பாதிக்கப்படும் எனக்கூறி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நயினாா்குளத்தின் கரையை பலப்படுத்தும் வகையில் தடுப்புச்சுவா் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தைக்கு கூடுதலாக வாகனங்கள் வரும் என்பதால் அங்கு நடைபெறும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com