களக்காடு அருகே ஆடு திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (60). இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். வழக்கம் போல ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு வந்துள்ளாா். மறுநாள் எழுந்து பாா்த்த போது, செம்மறி ஆடு ஒன்றை காணவில்லையாம். இது குறித்து இசக்கி முத்துவின் மகன் சுந்தா் களக்காடு காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.