திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா்.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்பு இணைப்புச் சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கைலாசபுரத்தில் சாலையோரம் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களிடம் நோட்டீஸ் வழங்க சென்றனா். அதனை பெற மறுத்தவா்களின் கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.