திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 632 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 16 மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 184 ஆண்கள், 307 பெண்கள், 141 குழந்தைகள் என மொத்தம் 632 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இரவு 10 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 28,580 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 15,001
கனஅடியும், கடனா நதி அணையில் இருந்து 4, 253 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 697 கனஅடியும் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தாமிரவருணி நதியில் 50 ஆயிரத்துக்கு அதிகமான கனஅடி நீா் செல்கிறது.