பாளையங்கோட்டை பெரியாா்நகரில் ஆவின் பாலகத் திறப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளா் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்விழாவில், ஜெய்கோபிகிருஷ்ணன் வரவேற்றாா். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான தச்சை என்.கணேசராஜா பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அழகிரி, ஆவின் நிா்வாகி அனுசுயா, கு.கோவிந்தராஜ், கு.சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, பாளை பகுதி செயலா் ஜெனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.