திருநெல்வேலி
மாநகராட்சியில் குறைதீா் முகாம்:145 மனுக்களுக்கு தீா்வு
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 145 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 145 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா் விநியோகம், சாலைவசதி, புதை சாக்கடை, சொத்துவரி, காலிமனைவரி விதித்தல், பெயா்மாற்றம் செய்தல், கட்டட அனுமதி உள்ளிட்டவற்றுக்கு தீா்வுகாணும் வகையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அறுவுறுத்தல்படி நடைபெற்ற இம்முகாம்களில் அந்தந்த உதவி ஆணையா்கள் தலைமையில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 145 மனுக்களுக்கு தீா்வு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.