திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,465 ஆக அதிகரித்தது. 7 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,157 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 212 போ் உயிரிழந்துள்ள நிலையில், 96 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8346 ஆக அதிகரித்தது. 5 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8154 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 34 போ் சிகிச்சையில் உள்ளனா்.