கரோனா தடுப்பூசிக்கு பயப்பட தேவையில்லை: மருத்துவக் கல்லூரி முதல்வா்

கரோனா தடுப்பூசி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்றாா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன்.

கரோனா தடுப்பூசி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்றாா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன்.

திருநெல்வேலி உயா் சிறப்பு மருத்துவமனை, ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. அரசு உயா்சிறப்பு மருத்துவமனையில் இப்பணியை ஆட்சியா் வே. விஷ்ணு தொடக்கிவைத்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் 49 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இரண்டு மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டதில், ஓய்வுபெற்ற மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என 105 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை; இதை அனைவரும் போட்டுக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com