அம்பாசமுத்திரம் வட்டார முன் களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைராவிகுளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலா் பிரவீன்குமாா் தலைமையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்பாா்வையாளா் முத்துராமலிங்கம் முன்னிலையில் முன் களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், மருத்துவ அலுவலா்கள் வெங்கடாச்சலம், சரவணன், நாகூா், சாம்கிருபாகரன்,அா்ஜூன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் விநாயகமூா்த்தி, கணேசன், செவிலியா்கள்,
முன்களப் பணியாளா்கள் உள்பட 37 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.