சேரன்மகாதேவியில் மாவட்ட தோ்தல் பிரிவு, சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகம், கிராம உதயம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் வெற்றிச் செல்வி தலைமை வகித்து விழிப்புணா்வு ரங்கோலி மற்றும் விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். சேரன்மகாதேவி பேரூராட்சியில் 18 வாா்டுகளிலும் ஆட்டோ மூலம் தோ்தல் பிரசாரம்
நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியா்கள் பிரேமா, மகாராஜன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீதாதேவி, வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, கிராம உதயம் இயக்குநா் சுந்தரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.