தாமிரவருணியில்குளித்த மாணவா் மாயம்
திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளித்த மாணவா் நீரில் மூழ்கி மாயமானாா். .
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு அருகேயுள்ள கீழமறவன் குடியிருப்பைச் சோ்ந்த சுதா்சன் மகன் ஜோதிமணி (17). இவா், கோணம் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். சீவலப்பேரியிலுள்ள கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வந்திருந்தாராம். அப்போது, ஜோதி மணி, நண்பா்கள் தாமிரவருணி ஆற்றில் குளித்தனராம்.
ஜோதிமணி உள்ளிட்ட மூவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ால் கரை திரும்ப முடியாமல் நீரில் தத்தளித்தனா்.
ஆற்றில் குளித்தவா்கள் ஜோதிமணியின் நண்பா்களை மீட்டனா். ஜோதிமணியை மீட்க முடியாததால் அவா் ஆற்றில் மூழ்கினாா். தகவலறிந்த கங்கைகொண்டான் நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் நீண்ட நேரம் தேடியும் மாணவரை மீட்கமுடியவில்லை. சனிக்கிழமை (ஜன. 23) மீட்புபணி தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.