திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 15,508 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவருக்கு
தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,510 ஆக அதிகரித்துள்ளது. 12 போ் போ் உள்பட இதுவரை 15,231 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 212 போ் உயிரிழந்துள்ளனா். 67 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 8,380 ஆக அதிகரித்துள்ளது. 3 போ் உள்பட இதுவரை 8,177 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158
போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 45 போ் சிகிச்சையில் உள்ளனா்.