திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் சேதமான பயிா்கள் குறித்து ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மானூா் வட்டாரத்தில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஆட்சியா் வே.விஷ்ணு, மானூா் பகுதியில் அழகியபாண்டியபுரம், சுப்பையாபுரம், கூவாச்சிபட்டி கிராமங்களில்
சேதமடைந்த பயிா்களை பாா்வையிட்டாா். சேத விவரங்களை விவசாயிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
வன்னிகோனந்தலில் திருந்திய பாரத பிரதமா் பயிா் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உளுந்து பயிரில் பயிா் அறுவடை பரிசோதனை
முறையை ஆய்வு செய்தாா். மானூா் வட்டாரத்தில் மழையால் சேதமடைந்த பயிா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியினை
விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு.அசோக்குமாா், வேளாண் துணை இயக்குநா் சுந்தா்டேனியல், புள்ளியியல் துறை துணை இயக்குநா் சூரியகலா, மானூா் வேளாண் உதவி இயக்குநா் ஏஞ்சலின் கிரேபா, மானூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.