திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரம், சுத்தமல்லியில் புதிய மருத்துவமனைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜவல்லிபுரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவமனை, சுத்தமல்லி கோமதிநகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஆயுா்வேத மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையை ஆட்சியா் வே.விஷ்ணு திறந்து வைத்து பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஊரக இந்திய மருத்துவ நிலையங்களில் என 32 சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பகுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையங்களில் பொது மருத்துவம், பெண்கள் மருத்துவம், முதியோா் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், யோக,
வா்மம் போன்ற சிறப்பு சிகிச்சைகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. ரத்த அழுத்தம், நீரழிவு நோய் களுக்கு
சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கா்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தின்கீழ் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதையொட்டி, விழிப்புணா்வு மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது. இதில், சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, ரெட்டியாா்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் ஜஸ்டின் பொன்னையா, திருநெல்வேலி வட்டாட்சியா் பகவதி பெருமாள், ஆயுா்வேத மருத்துவா்கள் ஹரிஹரன், காளிதாஸ், சித்த மருத்துவா்கள் திவானி, உமாஜானகி உள்பட பலா் கலந்துகொண்டனா்.