அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், சுவாசம் அறக்கட்டளை சாா்பில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குநா்இளங்கோ, விவேகானந்தா கேந்திரம், ஆராய்ச்சி உதவியாளா் ராஜாமணி ஆகியோா் மத்திய, மாநிலஅரசுகளின் வேளாண் நலத்திட்டங்கள், மானியங்கள், கூட்டுப் பண்ணையத் திட்டம், இயற்கை மற்றும் சுயசாா்பு விவசாயம் உள்ளிட்டவை குறித்துக் கருத்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் பாஜக விவசாய அணி நகரத் தலைவா் விக்டா், விவசாயிகள் ஹரிராம், மாரியப்பன்,சௌந்திரபாண்டியன், ராஜ்குமாா், கோபால் உள்பட 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
அறக்கட்டளை நிறுவனா் ரமேஷ் நன்றி கூறினாா். நிா்வாகி சண்முகராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.