அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி அருகே கூனியூரில் முள்புதரில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
சேரன்மகாதேவி அருகே வடக்கு காருக்குறிச்சி 1ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்தம்மாள் (75). கணவா் இறந்த நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்தாா். ஜன. 17 ஆம் தேதி முதல் முத்தம்மாளைக் காணவில்லையாம். இந்நிலையில் கூனியூா் மண்பாண்ட கூட்டுறவு சங்க வளாகத்துக்கு பின்புறம் உள்ள முள்புதரில் அழுகிய நிலையில் அவரின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.