திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.கண்ணன். இவரது வீட்டில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். எனினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.