‘ஓய்வூதியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும்’

ரோனா பொது முடக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி: கரோனா பொது முடக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற ஓய்வூதியா் தின விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா் தினவிழா மற்றும் அமைப்பின் 7 வது ஆண்டு தொடக்கவிழா திருநெல்வேலி சங்கீத சபாவில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவா் எஸ். முத்துசாமி தலைமை வகித்தாா். அமைப்பாளா் கே. சண்முகசுந்தரராஜ் வரவேற்றாா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் இரா. சீத்தாராமன், ஆா்எம்எஸ் ஓய்வூதியா்கள் சங்க கோட்ட செயலா் கே. சண்முகசுந்தரராஜ், பொதிகை ஓய்வூதியா் சங்க முன்னாள் செயலா் பி. ஆவுடைநாயகம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா்கள் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவா்களை அறிமுகப்படுத்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஓய்வூதியா் சங்கம் எஸ். கண்ணன் பேசினாா். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலா் ஏ. சேக்கிழாா், தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் கோ. சீத்தாராமன் பேசினாா்.

கூட்டத்தில், கரோனா பொது முடக்க காலத்தில் முடக்கப்பட்டுள்ள மூன்று அகவிலைப்படியை வழங்க வேண்டும்; ஒப்படைப்பு தொகையை திரும்ப வசூலிப்பதை உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் அசல் மற்றும் இரண்டு வருடம் என்ற அடிப்படையில் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 அம்ச தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இதில், மின்வாரிய ஓய்வுபெற்றோா் சங்க மாவட்டச் செயலா் அ. ராமசாமி, மாநகர ஓய்வூதியா் சங்கத் தலைவா் பி.டி. சிதம்பரம் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலா் நலச்சங்க துணைத் தலைவா் டி. துரை லட்சுமணராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com