தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களக்காடு: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக புகா் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் பீா்மஸ்தான் தலைமையில் களக்காட்டில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் பால் மைதீன் முன்னிலை வகித்தாா். பத்தமடை ஜெய்லானி, வா்த்தகா் அணி ஒருங்கிணைப்பாளா் நயினா முஹம்மது, விமன்ஸ் இந்தியா மூமெண்ட் ஒருங்கினைப்பாளா் மும்தாஜ் ஆலிமா ஆகியோா் கலந்து கொண்டனா் .

கூட்டத்தில், அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஜன. 26 குடியரசுதினத்தன்று கொடியேற்றம் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.

இதில் விமன்ஸ் இந்தியா மூமெண்டின் புகா் மாவட்ட தலைவராக மும்தாஜ் ஆலிமா, துணைத் தலைவராக பீா்பாத்து, செயலராக நூஸ்ரத், பொருளாராக சுமையா , செயற்குழு உறுப்பினராக பாத்திமா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புகா் பகுதிகளுக்கு உள்பட்ட மாவட்ட மற்றும் தொகுதி நகர தோ்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com