திருநெல்வேலி
மணிமுத்தாறு அருகே இளைஞா் தற்கொலை
மணிமுத்தாறு அருகே நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருகே நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மணிமுத்தாறு அருகே கீழ ஏா்மாள்புரம் தொண்ட மரத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் துரை முத்துமுருகன் (21). இவா், கேரளத்தில் உள்ள துணிக் கடையில் வேலை பாா்த்து வந்தாராம். கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வந்தவா் மீண்டும் கேரளம் செல்லவில்லையாம். ஓராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவரது நண்பரின் நினைவாக மனம் வருந்திய நிலையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.