திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயா் கோயிலின் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
மணிமூா்த்தீஸ்வரத்தில் பழைமை வாய்ந்த உச்சிஷ்ட விநாயகா் கோயில் உள்ளது. ராஜகோபுரத்துடன் தாமிரவருணி கரையில் உள்ள இக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா். பின்னா் விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.