ரவணசமுத்திரம் வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

ரவணசமுத்திரம் வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரவணசமுத்திரம் வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவா் புகாரி மீரா சாகிப், போக்குவரத்துக் கழக பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சி வழியாக பாபநாசம் பணிமனையைச் சோ்ந்த 3 சி, 6, திருநெல்வேலி பணிமனையைச் சோ்ந்த 129 எம் ஆகிய எண்களையுடைய பேருந்துகள் கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டது.

பின்னா் படிப்படியாக தளா்வு அளிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டநிலையில், இந்த மூன்று வழித்தடங்களிலும் பேருந்துகள் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் பகுதி மக்கள் சுமாா் 1.5 கி.மீ. தொலைவு நடந்து சென்று பேருந்து ஏறவேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com