சங்கரன்கோவிலில் தேசிய வாக்களார் விழிப்புணர்வுப் பேரணி

சங்கரன்கோவிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் வருவாய்துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி கோட்டாட்சியர் முருகசெல்வி தலைமையில் நடைபெற்றது. பேரணியில் நகராட்சி ஆணையர் சாந்தி, சுகாதார அலுவலர் பாலசந்தர், நகராட்சி மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது,தேர்தல் பிரிவு எழுத்தர் முருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவர் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பயணியர் விடுதியில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com