சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்த முதியவர் மருதையா(70). இவர் திங்கள்கிழமை காலை தனது தோட்டத்திற்கு சைக்கிளில் திருநெல்வேலி - சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் தொழில் கல்லூரி அருகே வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் மருதையா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.