திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,528ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை 3 போ் உள்பட இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,254ஆக அதிகரித்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ளனா். 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,397ஆக உயா்ந்தது. 3 போ் உள்பட இதுவரை 8,191 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16,070 போ் குணமடைந்து
வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 போ் உள்பட 16,403 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.