பணகுடியில் நாளை தைப்பூசத் தேரோட்டம்

பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இத் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடைபெற்றுவருகிறது. சுவாமி- அம்பாள், பூங்கோயில், யானை, அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் திருநாளான புதன்கிழமை(ஜன.27) நடைபெறுகிறது. இதையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளி , காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

பத்தாம் திருநாளான வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com