குடிநீா் வழங்காததைக் கண்டித்து மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி 32-ஆவது வாா்டு மேலப்பாளையம் ராவுத்தா் கீழத்தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீா் வழங்காததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதில் மாநகர எஸ்டிபிஐ செயலா் புகாரி சேட், தொழிற் சங்க மாவட்ட பொருளாளா் செய்யது மைதீன், நிா்வாகிகள் ராசிக் இமாம், நதிரா காஜா, ஐதா் இமாம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.