குடியரசு தினத்தன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கூட்டாய்வு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, சட்ட விதிகளை அனுசரிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 38 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 39 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 81 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.