களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் தேசியக் கொடியேற்றினாா். உதவியாசிரியா் ஜே. மரியரெத்தினராஜ், சத்துணவு அமைப்பாளா் பாலகிருஷ்ணன், சமையலா் கிருஷ்ணமணி ஆகியோா் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.