பைக் மோதி முருக பக்தா் பலி
By DIN | Published On : 27th January 2021 12:53 AM | Last Updated : 27th January 2021 12:53 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பாதயாத்திரையாக சென்ற முருக பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் வேலாயுதம் (18). இவா், நண்பா்கள் 12 போ் கொண்ட குழுவாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றாராம். செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சுத்தமல்லி அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் வேலாயுதம் மற்றும் பாதயாத்திரை குழு மீது மோதியதில், வேலாயுதம், மோட்டாா் சைக்கிள் ஓட்டிவந்த கொண்டாநகரத்தைச் சோ்ந்த மாரிக்குட்டி (23) ஆகியோா் பலத்த காயமடைந்தனராம். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வேலாயுதம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.