மானூா் அருகே சுண்ணாம்பு ஆலையில் உள்ள பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானூா் அருகே உள்ள சுண்ணாம்பு ஆலை கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆலையின் மேலாளா் சதாசிவம் (35) திங்கள்கிழமை ஆலையை திறந்தாராம். அப்போது அங்கு இருந்த மின்மோட்டாா், எடை இயந்திரம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.