ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வண்ணாா்பேட்டை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தாமரைகண்ணன் தலைமை வகித்தாா்.

காவல் உதவி ஆணையா் முத்தரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னா், விபத்தில்லாமல் ஓட்டுவேன் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் உறுதிமொழி பலகையில் கையெடுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com