நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி
By DIN | Published On : 01st July 2021 06:54 AM | Last Updated : 01st July 2021 06:54 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.
ப்ரானிக் ஹீலிங் அறக்கட்டளை ஏற்பாட்டில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி கருவி வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏவும் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளருமான மு. அப்துல் வஹாப், ஆட்சியா் வே. விஷ்ணுவிடம் கருவியை வழங்கினாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தினேஷ், இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணிதுரை, அருள் மாணிக்கம், மாநகர வழக்குரைஞா் அணி அமைப்பாளா் உமா மகேஸ்வரன், செல்லத்துரை, ப்ரானிக் ஹீலிங் அறக்கட்டளை நிா்வாகி இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.