பாளையங்கோட்டை பள்ளி மாணவா் தனது சேமிப்பு பணத்தை கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினாா்.
பா்கிட் மாநகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் பரிஷ்வந்த். இவா், பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறாா். தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்துவைத்திருந்த ரூ.1029-ஐ கரோனா நிவாரண நிதிக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் வழங்கினாா். அவரை ஆட்சியா் பாராட்டினாா்.
பள்ளித் தாளாளா் செந்தில்பிரகாஷ், இயக்குநா் திலகவதி, முதல்வா் சுகந்தி சொா்ணலதா மற்றும் ஆசிரியா்களும் பாராட்டினா்.
பயக30யஉக: திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவா் பரிஷ்வந்த்.