பெருமாள்புரம் அருகே நகைப் பறிப்பு

பெருமாள்புரம் அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பெருமாள்புரம் அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பெருமாள்புரம் அருகேயுள்ள என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (54). இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று பணிமுடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம். அவா்களை சுப்புலட்சுமி தடுத்த நிலையில், 2 பவுன் நகையுடன் மா்ம நபா்கள் மாயமாகினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com