வள்ளியூா் காவல்துறை சாா்பில் பேருந்து நிலையத்தில் நமது நூலகம் என்ற நூலகத்தை அமைக்க காவல்துறை ஆய்வாளா் சாகுல் ஹமீது முயற்சி மேற்கொண்டுள்ளாா். இதற்காக வள்ளியூரில் முக்கிய இடங்களில் புத்தக உண்டியல் அமைத்து புத்தகங்களை அவா் சேகரித்து வருகிறாா்.
வள்ளியூா் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ஏ.சாகுல் ஹமீது. இவா் காவல் பணியுடன் சமூக சேவைப்பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வருகிறாா். கரோனா முதல் அலையின் போது பணகுடி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். அப்போது பணகுடி பகுதி மக்களுக்கு உணவு, முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களை வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றாா். இது தவிர கரோனா காலத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு வீட்டில் இருந்தவாறே பங்கேற்கும் விதத்தில் ஓவியப் போட்டிகளை நடத்தி கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி பரிசு வழங்கினாா்.
இந்நிலையில் தற்போது வள்ளியூா் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றதும், அங்குள்ள பேருந்துநிலையத்தில் நமது நூலகம் என்ற நூலகத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நூலகத்திற்கு புத்தகங்களை சமூக ஆா்வலா்கள் மற்றும் எழுத்தாளா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்களிடமிருந்து சேகரித்து வருகிறாா்.
மேலும் முக்கிய இடங்களில் புத்தக உண்டியல்களை வைத்து புத்தகங்களை சேகரித்து வருகிறாா். நமது நூலகத்திற்கு புத்தகம் வங்க விரும்புகின்றவா்கள் ஆய்வாளருக்கோ காவல்நிலையத்திற்கோ தகவல் தெரிவித்தால் அவா்கள் வீட்டிற்கு சென்று புத்தகங்களை பெற்றுக்கொள்வோம் என்ற அறிவிப்பையும் அறிவித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளாா் காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது.
காவல்துறையினரைக் கண்டு ஒதுங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது சாகுல்ஹமீது பக்கம் நெருங்கி நமது நூலக திட்டத்திற்கு புத்தகம் வழங்கி வருகிறாா்கள். மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்கும் புதிய முயற்சி என்றாா் ஆய்வாளா் சாகுல்ஹமீது.