பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலச் செயலா் பிரேம்நாத் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் மணிவண்ணன், தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், விவசாய அணி மாவட்டச் செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் விறகு வைத்து மண்பானையில் சமைப்பது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.