திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் றி.டி.றி.ஏ தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் தொடங்கிவைத்தாா். கரோனா நோய் தொற்றை தடுக்க சுகாதாரத்துறையினா் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனைத் தொடா்ந்து திருநெல்வேலி மக்களவை உறுப்பினரின் சொந்த ஊரான ஆவரைகுளம் றி.டி.றி.ஏ தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம் முகாமை சா.ஞானதிரவிம் எம்.பி தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி போடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.