களக்காட்டில் மணிக்கூண்டு பகுதியில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகரின் முக்கியப் பகுதியாக அண்ணாசாலை உள்ளது. இதில் மணிக்கூண்டு திடல் அமைந்துள்ள பகுதியில் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தனியாா் நிதி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் இப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இங்கு வந்து செல்லும் சுற்று வட்டாரக் கிராம மக்கள் இயற்கை உபாதையைக் கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனா். வங்கிச் சேவை பெற மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலமும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மணிக்கூண்டு பகுதியில் கழிப்பிட வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.